Monday, January 6, 2020

Sleeping beauty

 காலை கதிர்கள் உன் முகத்தில் பட்டு  சிதறி வானவில்லாய் உன்னை பார்த்து புன்னகைக்கும்!

ஜன்னல் பறவை கண்ணாடி வழியே உன்னைக்கண்டு அமைதி காக்கும்!

சாலை வாகனங்கள் நம் வீடு தாண்டும் வரை கப்பலாய் மிதக்கும்!

கடிகார அலாரம் 59 நிமிடம் முடிந்து சத்தமில்லாமல் அடுத்த மணிக்குள் கைகளை நுழைக்கும்!

இவ்வளவு ஏன்
நேரமாச்சு இன்னுமா தூக்கம் என எழுப்ப வந்த நானும்
உன்னில் மயக்கம் கொண்டேன்!
அந்த ஆயர்பாடியின் கண்ணனும் நீயோ!!!

1 comment:

U does not say that U will agree to whatever you say , but definitely U likes you saying whatever you feel.