Saturday, January 11, 2020

கரைந்த கவலைகள்



துயில் எழுந்ததிலிருந்து இனம் புரியா துக்கம்.
தூங்கினால்,துக்கம் போகுமென உறங்கினேன்,
துரும்பை போல் துருத்திக்கொண்டே இருந்தது.

பசித்திருந்தால் பரவாயில்லை என்றாலும் 
படுத்தியது மனது.

உண்டால் உற்சாகம் வருமென
பிரியாணி யையும் பிரித்தேன்
பட்டினியே பரவாயில்லை என்றது.

காற்று வாங்கினால் கவலை கலைந்து போகும் என
கடற்கரை நடந்தேன்
கவலை குட்டிகள் போட்டது

ரசித்தால் ரணம் ஆறும் என ரஜினியை பார்த்தேன்
கவலை ரயில் போல் நீண்டது 

சமைத்தால் சரியாகும் என நினைத்தேன் 
சமயம் பார்த்து மீண்டும் வந்தது.

சமைத்ததை சாப்பிட மனமில்லாமல் பிளாட்பார தாத்தாவுக்கு பகிர்ந்தேன்
பொக்கை சிரிப்பு கண்டு மனம்,பூக்க கண்டேன் .



Attachment.png

No comments:

Post a Comment

U does not say that U will agree to whatever you say , but definitely U likes you saying whatever you feel.