Sunday, March 8, 2020

என்னை நானாக பார்த்த என் தேவதைகளுக்கு

என் தேவதைகளுக்கு இறக்கை இல்லை
இரக்கம் நிறைய !

என் தேவதைகளுக்கு பறக்கத் தெரியாது,
பாசத்தை பொழிய தெரியும் !

என் தேவதைகள் வரம் கொடுக்காது ,
வரமே அவர்கள் தான் !

அவர்கள் சிறகை பிய்த்து எறிந்தாலும் ,
தரையில் காலூன்றி , நீங்கள் பறக்க வானாய் இருப்பார்கள்.

அவர்கள் கடவுளுக்கு நெருக்கமானவர்கள் அல்ல
சமமானவர்கள் !!!


1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

U does not say that U will agree to whatever you say , but definitely U likes you saying whatever you feel.