Wednesday, April 1, 2020

...

பூமி ௨னக்கானது மட்டுமில்லை,
நீயும் இப்புவியில் ஓர் விருந்தினர், அவ்வளவே!

நீ வானை ௮ளக்கவில்லை,
வானே  உனக்கு படியளக்கிறது!

நீ ௨லகை ௨ள்ளங்கையி்ல் அடைக்கவில்லை,
உலகே, ௨ன்னை உள்ளங்கையில் தாங்குகிறது!

கோபுரத்தின் மேலுள்ள காக்கையாய் , ௨ன் ௭ண்ணம் !
கை கூப்புகிறவர்கள், கோபுரத்தை பார்க்கிறார்களே தவிர, காக்கையை அல்லவே!

இயற்கையும் காலமும் செவ்வன தன் வேலையை செய்து கொண்டு இருக்கிறது.
முடங்கிக் கிடப்பது நீயும் ௨ன் படைப்புகளும் தான்!

இன்றும் உன் படைப்புகள் உன்னை தாக்கவில்லை,
படைத்தவனே காக்கின்றான்.!

எல்லா வாய்ப்புக்களும் மறுப்பிறவி இருப்பதில்லை,
இன்றாவது விழித்துக்கொள் மனிதா!!!

No comments:

Post a Comment

U does not say that U will agree to whatever you say , but definitely U likes you saying whatever you feel.