Sunday, April 5, 2020

என்னவனே....

௮ளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாமே!
அதனால் தான் ௨ன் அழகு என்னை கொல்கின்றதோ?

சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில்லை நீ,
சுருங்கச் சிரித்தே விளங்க வைக்கின்றாய்!

காதலுக்கு கண்ணில்லை என்பர்,
௨ன் காதலன்றி எனக்கு கண்ணே இல்லை!

தாய்க்கு பின் தாரம்.
இத்தாரத்திற்கு, இன்னொரு தாய் நீ!

இப்படி எத்தனையோ    பழமொழிகள் சொன்னாலும்,
நீ என்றென்றும்
என் வாழ்வின் புத்தம் புது மொழி!!! 

No comments:

Post a Comment

U does not say that U will agree to whatever you say , but definitely U likes you saying whatever you feel.