Wednesday, February 5, 2020

தூரத்து பச்சை

உனக்கென்ன ! வேலைக்கு சென்று விடுவாய் - என்பவர்கள்
கல்யாணம் செய்து கொள்ளாதீர்கள் !

உனக்கென்ன ! உன் வீட்டுக்காரர் எதையும் கேட்ட மாட்டார் - என்பவர்கள்
உங்கள் கணவரை அசிங்கப்படுத்தாதீர்கள் !

உனக்கென்ன ! பிள்ளையா குட்டியா - என்பவர்கள்
தயவு செய்து குழந்தை பெற்று கொள்ளாதீர்கள் !

எங்கள் வலி உங்களுக்கு தெரியவில்லையே
என்பதல்ல என் ஆதங்கம்,
உங்கள் வாழ்க்கை உங்களுக்கு புரியவில்லையே
என்பது தான்.

உங்களின் ஒவ்வொரு “உனக்கென்ன” வும்
உங்களை சார்ந்த யாரோ ஒருவரையோ , ஏதோ ஒன்றையோ
உங்களையறியாமல் , தரம் தாழ்த்தி விடுகின்றது.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதல்ல !
எல்லா பச்சையுமே அழகு தான், - நம் கண்ணாடியில்
கறை இல்லாதவரை !


1 comment:

  1. உனக்கு
    என்னென்ன
    எண்ணங்கள் உளது
    எனதறியாதவர் தான்
    உனக்கென்ன
    என்று கூறுவார்
    அவர்கள்
    தன்னைப் பற்றியே
    முழுவதுமாக
    அறியாதவர்கள்
    இக்கரைப் பச்சையின்
    இன்பத்தை உணராதவர்கள்...

    ReplyDelete

U does not say that U will agree to whatever you say , but definitely U likes you saying whatever you feel.